2017.12.21 இன்று பிற்பகல் மாவட்டச் செயலகத்தில் இ்டம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவா் அதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும் ஒரு சுயேட்சை குழுவையும் 341 வேட்பாளர்களும் 297 நியமன பிரதிநிதிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதில் கரைச்சி பிரதேச சபைக்கு ஒன்பது அரசியல் கட்சிகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும் பூநகரி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும்
பளை பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும் என ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன.
ஜக்கிய தேசிய கட்சி சிறிலங்கா சுதந்திர சட்சி தமிழரசுக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழு ஜேவிபி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி சிறிலங்கா பொதுஜன பெரமுன எனபனவே கிளிநொச்சியில் போட்டியிடுகின்றன. நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாகவும் சமாதானமாகவும் நீதியாகவும் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுவும் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறும்.
No comments:
Post a Comment