கிளிநொச்சி முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கரைச்சி பிரதேச சபை செயலாளரே எமக்கான அடிப்படை உரிமைகளில் ஆதிக்கம் செலுத்தாதே  நிலவாடகை அடிப்படை பிரச்சினை சீர்செய்யப்படவில்லை  வருடாந்த வாடகை 3600 ரூபாவை 1200 ரூபாவாக குறைக்கவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களை தரக்குறைவாக கருதாதே  உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருத்தினர்.

அத்தோடு கிளிநொச்சியில் உள்ள தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகள் இருப்பதனால் நாளாந்தம் வருமானம் 400 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரையே கிடைக்கப்பெறுகிறது இதனால் பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்களின் தொழிலை கைவிட்டு கூலி வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவே எமது இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அவர் எங்களுக்கு எதிரான வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.





இவர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு ஆளுநர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment