கிளிநொச்சி வன்னேரிகுளம் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இலக்கம் 02. சோமரன்கட்டு. வன்னேரிகுளம் எனும் முகவரியைச் சேர்ந்த நடராசா சோமசுந்தரம் என்பவருடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் 2015.05.08 ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியில் சென்று வீடு திரும்பவில்லை என்றும் அதன் பின்னர் அவரின் குடும்பத்தினரால் தேடப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர் இன்று காலை 10.00 மணியளவில் பிரதேசவாசிகளினால் குறித்த இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment